அசம்பாவிதம் ஏதுமின்றி… கொட்டக் கொட்ட விழித்திருந்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

Published:

police force - 2026

சென்னஈ: தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்ற நிலை, ஒருவாறு தணிந்து போனது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன. இதற்கு, காவல் துறையின் திட்டமிட்ட முன்னேற்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்தான் காரணம் என்று பரவலாக பாராட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி மரண நிகழ்வில் அனைத்து அரசு ஊழியர்களும், விடுமுறை தினம் என வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கும் போது, காவல்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியும், வியர்வையில் நனைந்தும், உணவு உண்ணாமலும், பல்வேறு துயரங்களை அனுபவித்துக்கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக காவல்துறைக்கு நிகர் யாரும் இல்லை… காவல் துறை நண்பர்களின் பணி அளப்பரியது. என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.

அடுத்தது அமுதா, IAS . கருணாநிதி நல்லடக்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என புகழ்கின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

கருணாநிதி நல்லடக்கத்தின் போது ஸ்டாலின் அவர்களுடன் வெள்ளை சுடிதாரில் சுறுசுறுப்பாக சுற்றி வந்தவர். கிடைத்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தேவையானதை உடனடியாக பொறுப்பாக செய்தார். கூடவே கருணாநிதியின் ஒவ்வொரு உறவினர்களிடமும் கருத்தறிந்து அதன்படி செய்தது பலரைக் கவர்ந்தது. இறுதியாக அவரும் ஒரு பிடி அள்ளிப் போட்டது நெஞ்சை நிறைத்தது என சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img