காமராஜருக்கு மெரீனாவில் இடம் கோரவில்லை: பழ.நெடுமாறன் விளக்கம்

Published:

karunanithi square2 - 2026

முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்தபோது அவருக்கு மெரீனாவில் இடம் அளிக்குமாறு அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலரும், தமிழர் தேசிய முன்னணித் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கை சத்தியமூர்த்தி பவனில் நடத்தத் திட்டமிடப்பட்டது.

அவரை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி இடம் தர மறுத்தார் என்று கூறுவது தவறு. மாறாக, காமராஜரின் இறுதிச் சடங்குக்கு காந்தி மண்டபத்தில் அரசு நிலத்தை அளித்து அந்த இடத்தில் இறுதிச் சடங்கை நடத்துமாறு கருணாநிதிதான் கூறினார்.

அதன்படி காந்தி மண்டப நிலத்தில் காமராஜரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அந்த இடத்தில் நினைவிடமும் அமைக்கப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img