அண்ணா போட்ட மோதிரத்தை… திருப்பிக் கொடுக்கச் சென்ற கருணாநிதி…!

karunanithi2 horz - 2026

எத்தனை பேர் பசியோடு இருப்பார்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் கோயிலில் சிலைகளுக்கு பாலை ஊற்றி வீணாக்குகிறார்களே என்று ஈவெராவிய பகுத்தறிவாளர்கள் புலம்புவார்கள்.

இந்த உலகில் பொருளாதாரம் கறாரான இலட்சியவாதத்துடன் இயங்குவதில்லை.

தனிமனிதன் தனது மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இயங்குவான்.கோயில் சிலைகளுக்குப் பால் ஊற்றாமல் அதை வேறு யாருக்கும் கொடுங்கள் என்று கூறினால் அதைச் செய்யப்போவது சிலரே.

கோயிலுக்கு பால் அளிப்பவர்களில் பெரும்பாலானோர் அதைச் செய்யாமல் நிறுத்திவிடுவார்கள்.கோயிலில் பயன்படுத்தப்படும் மிகையான பால் உற்பத்தி படிப்படியாக இல்லாமல் போய்விடும்.

ஏனென்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பொருளாதாரம், அதை மனிதாபிமான அடிப்படையில் மாற்றமுற்பட்டால் அந்தப் பொருளாதாரம் நசிந்துவிடும்.

பொருளாதாரத்தின் ஓட்டத்தில் பெரும்பங்காற்றும் தனிமனித விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ளாமல் இலட்சிய மனிதராக எல்லா மனிதரையும் உருவகித்து, மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்க முயன்ற சோஷலிசப் பொருளாதார முறை தோல்வியடைந்ததும் பேரழிவை ஏற்படுத்தியதும் வரலாறு.

கோயிலுக்கு செல்லும் பால் வீணாகிறதா?

பால் வீணாகிறது என்பது மேம்போக்கான சிந்தனை.கோயில்கள் பாலுற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு பால் தொடர்ந்து வாங்கப்படுவதை பாலுற்பத்தியாளருக்கு உறுதிப்படுத்துகின்றன.

மாடு வளர்ப்போருக்கு அந்தப் பணம் கிடைக்கிறது.அவன் குடும்பம் பசியாறுகிறது.கோயில்கள் பணச் சுற்றோட்டத்தை உறுதிப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்கையளிக்கின்றன.அந்தப் பொருளாதாரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகின்றது.

அது மனிதாபிமான இலட்சிய அடிப்படையில் இயங்கவில்லை என்று புலம்பி அதை நாசம் செய்வது மனிதாபிமானத்துக்கு எதிராக முடிவடையும்.

பூனை வெள்ளையா கறுப்பா என்று கவலைப்பட்டுக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருப்பது முட்டாள்தனம்.அது எலியைப் பிடித்தால் சரி.இப்படித்தான் அந்தப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்போது தீராவிட போலிப் பகுத்தறிவின் மூட நம்பிக்கை ஒன்றைப் பார்ப்போம்.

அண்ணா கொடுத்த மோதிரம் என்று ஒரு மோதிரத்தை கருணாநிதியின் பிணத்துடன் புதைத்துள்ளார்கள்.அதை அந்த சடம்தான் உணருமா அல்லது மோதிரம்தான் அறியுமா!

எவ்வளவு கேவலமான மூடநம்பிக்கை.எகிப்தின் மம்மிகளுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்துப் புதைத்த 5000 வருடங்களுக்கு முற்பட்ட சிந்தனை வளர்ச்சியற்ற மூடத்தனத்தை, இன்றைய நவீன காலத்தில் இந்தக் காட்டுமிராண்டித் தீராவிடக் கூட்டம் பின்பற்றியுள்ளது.

அந்த மோதிரத்தை கழற்றி யாராவது ஏழைத் திமுக தொண்டனிடம் கொடுத்திருந்தால் அவன் எவ்வளவு மகிழ்ந்திருப்பான்.

கருணாவின் குடும்பம் ஆசியாவின் கோடீஸ்வரர் வரிசையில் இருப்பதற்கு கருணாவுக்காகத் தீக்குளித்து இறந்த எத்தனையோ அப்பாவித் தொண்டர்களில் ஒருவனின் குடும்பத்துக்கு அதைக் கொடுத்திருக்கலாமே!

– ந. சிவேந்திரன் 

Nadesapillai Sivendran

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories