விஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி

11 Aug 05 Vishwaroopam 2 - 2026

சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்னர் தொடர்ந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மர்மயோகி திரைப்படத்துக்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்ததாக குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மனுவை சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்தது. அதில்,  கமல்ஹாசனுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5 கோடியே 44 லட்சம் எங்களுக்கு திருப்பி அளிக்காமல், விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டுமென கோரப் பட்டிருந்தது.

இதற்கு கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மர்மயோகி படத்தை எழுதி இயக்கி நடிக்க ரூ.4 கோடி முன்பணம் பெற்றதாகவும், அந்தத் தொகை முழுதும் படத் தயாரிப்புக்காகவே செலவு செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மீதத் தொகையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தராததால், படத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது.

இதை அடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர், கமல்ஹாசனின் பதில் மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories