விஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி

11 Aug 05 Vishwaroopam 2 - 2026

சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்னர் தொடர்ந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மர்மயோகி திரைப்படத்துக்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்ததாக குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மனுவை சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்தது. அதில்,  கமல்ஹாசனுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5 கோடியே 44 லட்சம் எங்களுக்கு திருப்பி அளிக்காமல், விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டுமென கோரப் பட்டிருந்தது.

இதற்கு கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மர்மயோகி படத்தை எழுதி இயக்கி நடிக்க ரூ.4 கோடி முன்பணம் பெற்றதாகவும், அந்தத் தொகை முழுதும் படத் தயாரிப்புக்காகவே செலவு செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மீதத் தொகையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தராததால், படத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது.

இதை அடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர், கமல்ஹாசனின் பதில் மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories