சுதந்திர தினம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கொடியேற்றுகிறார். இதில் அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதனால்  கோட்டை கொத்தளத்தைச் சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள்  ஐந்தடுக்குகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் களமிறங்கியுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜர் சாலையிலும், கொடிமரச் சாலை, போர் நினைவுச் சின்னம் முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலையிலும் நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்கிய ஏழடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப் படுத்தியுள்ளனர். விடுதிகளில் தங்கும் நபர்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img