December 5, 2025, 6:33 PM
26.7 C
Chennai

சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

IMG 20180827 WA0005 - 2025

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்த இருவரையும், சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையில் இருந்து விடுவித்து தீ்ர்ப்பளித்துள்ளது.

 

நெல்லை மாவட்டம், வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரது மனைவி டாக்டர் நூர்ஜமீலா. கடந்த 1992 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக நாகூர் மீரான் இருந்தார்.

கடந்த 1996ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

அப்போது முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், அவரது மனைவி நூர்ஜமீலா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33.72 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக, தனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2.12.1999 அன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் தங்களின் வருமானத்திற்கான ஆவணங்களை போலீஸ் தரப்பில் சரிவர பரிசீலிக்கவில்லை. அதை கவனிக்காமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, எங்களுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாகூர் மீரான், நூர்ஜமீலாவின் ஆகியோர் மனு ஏற்கப்படுவதாகவும், இருவரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories