சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

IMG 20180827 WA0005 - 2026

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்த இருவரையும், சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையில் இருந்து விடுவித்து தீ்ர்ப்பளித்துள்ளது.

 

நெல்லை மாவட்டம், வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரது மனைவி டாக்டர் நூர்ஜமீலா. கடந்த 1992 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக நாகூர் மீரான் இருந்தார்.

கடந்த 1996ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

அப்போது முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், அவரது மனைவி நூர்ஜமீலா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33.72 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக, தனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2.12.1999 அன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் தங்களின் வருமானத்திற்கான ஆவணங்களை போலீஸ் தரப்பில் சரிவர பரிசீலிக்கவில்லை. அதை கவனிக்காமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, எங்களுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாகூர் மீரான், நூர்ஜமீலாவின் ஆகியோர் மனு ஏற்கப்படுவதாகவும், இருவரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories