February 21, 2026, 7:57 PM
29 C
Chennai

சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

IMG 20180827 WA0005 - 2026

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்த இருவரையும், சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையில் இருந்து விடுவித்து தீ்ர்ப்பளித்துள்ளது.

 

நெல்லை மாவட்டம், வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரது மனைவி டாக்டர் நூர்ஜமீலா. கடந்த 1992 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக நாகூர் மீரான் இருந்தார்.

கடந்த 1996ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

அப்போது முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், அவரது மனைவி நூர்ஜமீலா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33.72 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக, தனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2.12.1999 அன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் தங்களின் வருமானத்திற்கான ஆவணங்களை போலீஸ் தரப்பில் சரிவர பரிசீலிக்கவில்லை. அதை கவனிக்காமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, எங்களுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாகூர் மீரான், நூர்ஜமீலாவின் ஆகியோர் மனு ஏற்கப்படுவதாகவும், இருவரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories