திமுக., கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கும் அழகிரி !

Published:

alagiri - 2026

சென்னை: திமுக., கட்சியின் என்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றால், அது கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மு.க. அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு, இன்று நடக்கும் திமுக., பொதுக்குழுவில் முறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையே வரும் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி திமுக நிர்வாகிகள் சிலருடன் பேசி வருகிறார். கடந்த நான்கு நாட்களாக அவர்களுடன் பேசி வரும் அழகிரி, இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், கருணாநிதி இல்லாததால் கட்சியைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவராக கருணாநிதி இருந்த போது என்னைக் கட்சியில் சேர்க்கும் படி கூறியுள்ளார். ஆனால் அப்போது சிலர் அவரைத் தடுத்திருக்கிறார்கள். அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள்.

என்னை திமுக.,வில் சேர்க்கக் கூடாது என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன். இப்போது கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னைக் கட்சியில் சேர்க்கச் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் களமிறங்கியுள்ளேன். தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று பேரணி நடத்த உள்ளேன். தொண்டர்கள்தான் என்னை பேரணி நடத்தும்படி கூறினார்கள்.. என்று கூறினார் மு.க.அழகிரி.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img