December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

தாலிதான் கட்டி முடித்தார்… மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார்! குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்!

girl attack image - 2025

சேலம்: மேட்டூர் அருகே, திருமண நிகழ்வில் தாலி கட்டி முடித்ததும், மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகினர்.

ஈரோடு- பவானியை அடுத்த மயிலம்பாடியைச் சேர்ந்தவர் சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு வயது 35. பல இடங்களில் பெண் தேடியும் அவருக்கு திருமணம் செய்ய சரியான பெண் அமையவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்தார் சரவணன்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் தரகர் ஒருவர் மூலம் சேலம் மாவட்டம் கொளத்துார் பகுதியில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. வயது வித்தியாசம் இருமடங்காக, அதிகமாக இருந்த போதிலும், பழனிசாமி தனது 17 வயது மகளை திருமணம் செய்து தருவதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சரவணன் குடும்பத்தினர், திடீர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

சத்யா நகர் அருகே நாகேஸ்வரி அம்மன் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் பெண்ணுக்குத் தாலி கட்டினார் சரவணன். அப்போதுதான் பெண்ணின் வயிறு சற்று உப்பி பெரிதாக இருப்பதை கவனித்துள்ளார். இது குறித்து சரவணன் சந்தேகத்துடன் பழனிசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதால் அப்படித் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், திருமணம் எல்லாம் முடிந்து இரு வீட்டாரும் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் நேரத்தில், பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் தாங்க முடியாமல் உடனே ஆம்புலன்சில் ஏற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணைக் கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிடும். உடனே பிரசவ வார்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த விவரத்தை அறிந்த மணமகனும் அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் வீட்டார் தன்னை ஏமாற்றி விட்டதாக சரவணன் ஆவேசப் பட்டுள்ளார். இதை அடுத்து, தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, தங்கள் கிராமத்துக்கே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து பெண் வீட்டார் கூறியபோது, தங்களுக்கே இது தெரியாது என்று கூறி, பின்னணியைக் கூறியுள்ளனர். அந்தப் பெண் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரும் பெற்றோரும் திருநெல்வேலியில் தங்கி யூகலிப்டஸ் மரம் வெட்டும் பணி செய்துள்ளனர். அப்போது, அவர்களுடன் கருங்கல்லூரைச் சேர்ந்த ஒருவர் தங்கியிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தொடர்பில் அவர் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், குழந்தை பிறந்த பின்பே தங்களுக்கு இந்த விவரம் தெரிய வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், இந்தப் பெண் 18 வயது நிரம்பாத சிறுமி என்பதால் அவரை திருமணம் செய்த மணமகன், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்து கரு உருவாகக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் சிலர் கூறியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர் கொளத்துார் போலீசார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories