18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!

madurai high court - 2026

கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ? தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்தும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்த ஆதர்ஷா உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.

18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

நான் பி.ஏ.ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.எனது தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் எனது படிப்பு ஆகியவற்றிற்கு பணம் இன்றி தவித்து வருகிறோம்.
எனவே தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும்,தவறான சிகிச்சை அளித்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவில், கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை அவரது வீட்டிற்கு சென்று நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ?

தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

மேலும் மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்து உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories