18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!

madurai high court - 2026

கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ? தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்தும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்த ஆதர்ஷா உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.

18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

நான் பி.ஏ.ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.எனது தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் எனது படிப்பு ஆகியவற்றிற்கு பணம் இன்றி தவித்து வருகிறோம்.
எனவே தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும்,தவறான சிகிச்சை அளித்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவில், கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை அவரது வீட்டிற்கு சென்று நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ?

தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்து உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

Topics

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Entertainment News

Popular Categories