இன்னிக்கு நடக்க வேண்டியது… எம்.எல்.ஏ.,வின் கல்யாணம்…! ஆனால்… பாவம் ஒத்திவைப்பு!

Published:

bavani mla - 2026

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்‌.ஏ., ஈஸ்வரனுக்கு இன்று நடைபெறவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மணப் பெண் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் தோழி வீட்டுக்கு தப்பிச் சென்ற மணப்பெண், தன்னைவிட 20 வயது மூத்தவரான எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்கிறார்கள் என்றும், தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறி, அதனாலேயே தான் தோழியின் வீட்டிற்கு  வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவானதால், குறித்த தேதியில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்விக்க முயன்றனர். இந்நிலையில் உறவினர் பெண் ஒருவரைப் பார்த்துப் பேசி, அவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

bhavani mla invite - 2026

ஆனால், அந்த உறவுப் பெண்ணுடனும் இன்று நடைபெற இருந்த திருமணத்தை ஜாதகம், சூழ்நிலை  என்று கூறி, கடைசி நேரத்தில் ஒத்திவைத்துள்ளனர். அடுத்த மாதம் குரு பெயர்ச்சி வருவதால், குரு பெயர்ச்சிக்குப் பிறகு ஈஸ்வரனுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறி, அப்போது திருமணத்தைச்செய்யலாம் என பெரியவர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, இன்று நடைபெறவிருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img