திண்டுக்கலில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய ரௌடி ஒருவர் கைது செய்யப் பட்டார். மற்ற ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
திண்டுக்கல் தெற்கு காவல் துறை காவலர் பாண்டி பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே உள்ள பாண்டி முனீஸ்வரன் கோயிலில் மது அருந்தி கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ராகவன் ரெங்கன் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் ஈடுபட்ட. காவலர் பாண்டியை தாக்கிய ராகவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உடன் இருந்த ரௌடி ரெங்கன் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


