புஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு!

TNEB - 2026

நெல்லையில் அடுத்த 14 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு வுலைகள் உள்ளன. முதலாவது உலையில் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில் செப்.13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை மீண்டும் உற்பத்தி நிறுத்தப் பட்டது.

தூத்துக்குடியில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில் இரண்டாவது உலை மூடப்பட்டுவிட்டது. நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை என்று புகார் எழுந்தது. தற்போது காற்று குறைந்து வருவதால் நெல்லை, கன்யாகுமரி மாவட்ட காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது.

இதனால் தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ண ராஜ் அறிவிப்பில், செப்.24 முதல் அக்.7 வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. இதனால் நகர்ப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

14 நாட்களில் மொத்தம் 126 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிவரை 14 நாட்கள் மின்சாரம் இருக்கப்போவதில்லை என்பது மின்சார வாரியத்தின் அறிவிப்பாகும்.

மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு அலுவலகங்கள் உள்ளன. இவ்வளவு நீண்ட நேர மின்வெட்டு மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தாமிரபரணி புஷ்கரத்துக்கு நெல்லை தயாராகிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற அறிவிப்புகள், பக்தர்களை பல்வேறு வழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. ஏதோ நெருக்கடி கொடுக்கப் படுவதாகவே நெல்லை மக்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories