மனைவி, குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவன்: வீடியோ காட்டிக் கொடுத்தது!

wife child set fire - 2026

ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்று விட்டு நடமாடிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மனைவி பூமதி இறப்பதற்கு முன் பேசிய வீடியோவால் கணவர் கார்த்திக் சிக்கினார். கார்த்திக் தீ வைத்ததில் மனைவி பூமதி, 5 வயது குழந்தை நிலா ஆகியோர் இறந்தனர், மற்றொரு குழந்தை பூவரசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் போர்வெல் லாரி ஓட்டுனர் கார்த்திக். இவருக்கும் பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா, பூவரசன் என இரு குழந்தைகள்.

மது போதைக்கு அடிமையான கார்த்திக், தினமும் குடித்து விட்டு பூமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். கடந்த 19ஆம் தேதி பூமதி குழந்தைகளுடன் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை காப்பாற்றச் சென்ற தனக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கார்த்திக் அக்கம் பக்கத்தினரிடம் கூறியதால்,  இதனை தற்கொலை முயற்சி என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில், இன்று காலை பூமதி, ஐந்து வயது குழந்தை நிலா இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதற்கு முன்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, தன்னையும் குழந்தைகளையும் கணவர் கார்த்திக்தான் மது போதையில் தீ வைத்து எரித்ததாக அவரது சகோதரரிடம் கூறியுள்ளார். இதனை அவரும் பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இதை அடுத்து, இந்தப் பதிவையே மரண வாக்குமூலமாகப் பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, மனைவி,  குழந்தைகளை எரித்த கார்த்திக்கிடம் நடந்த உண்மையைக் கூறுமாறு விசாரித்துள்ளனர்.

அதன்படி, அன்று வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்த கார்த்திக், பூமதியை உடலுறவுக்கு அழைத்ததாகவும், குழந்தைகளை இருப்பதால் தன்னால் இயலாது என பூமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மூவரும் தூங்கிய பின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளான்.

இதை அடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories