மனைவி, குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவன்: வீடியோ காட்டிக் கொடுத்தது!

wife child set fire - 2026

ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்று விட்டு நடமாடிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மனைவி பூமதி இறப்பதற்கு முன் பேசிய வீடியோவால் கணவர் கார்த்திக் சிக்கினார். கார்த்திக் தீ வைத்ததில் மனைவி பூமதி, 5 வயது குழந்தை நிலா ஆகியோர் இறந்தனர், மற்றொரு குழந்தை பூவரசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் போர்வெல் லாரி ஓட்டுனர் கார்த்திக். இவருக்கும் பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா, பூவரசன் என இரு குழந்தைகள்.

மது போதைக்கு அடிமையான கார்த்திக், தினமும் குடித்து விட்டு பூமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். கடந்த 19ஆம் தேதி பூமதி குழந்தைகளுடன் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை காப்பாற்றச் சென்ற தனக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கார்த்திக் அக்கம் பக்கத்தினரிடம் கூறியதால்,  இதனை தற்கொலை முயற்சி என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில், இன்று காலை பூமதி, ஐந்து வயது குழந்தை நிலா இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதற்கு முன்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, தன்னையும் குழந்தைகளையும் கணவர் கார்த்திக்தான் மது போதையில் தீ வைத்து எரித்ததாக அவரது சகோதரரிடம் கூறியுள்ளார். இதனை அவரும் பதிவு செய்துள்ளார்.

இதை அடுத்து, இந்தப் பதிவையே மரண வாக்குமூலமாகப் பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, மனைவி,  குழந்தைகளை எரித்த கார்த்திக்கிடம் நடந்த உண்மையைக் கூறுமாறு விசாரித்துள்ளனர்.

அதன்படி, அன்று வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்த கார்த்திக், பூமதியை உடலுறவுக்கு அழைத்ததாகவும், குழந்தைகளை இருப்பதால் தன்னால் இயலாது என பூமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மூவரும் தூங்கிய பின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளான்.

இதை அடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories