புஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’

tanirabarani e1537928935362 - 2026

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது கலக்கி வருகிறது ஒரு ரிங் டோன். பலரும் தங்கள் மொபைல்களில் தாமிரபரணியைப் போற்றும் ரிங்டோனை வைத்து பெருமிதப் பட்டு வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரில் கலந்த ஒரே பொதுச் சொல் ‘தாமிரபரணி’. தாமிரபரணி ஆற்றின் பெயரை உச்சரிக்காமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களின் வாழ்நாளை துவங்குவதில்லை. அப்படி உயிரில் இனிமையாய்க் கலந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் இந்த வருடம் புஷ்கரம் எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடைபெறுகிறது.

நதிகளைப் புனிதமாகப் போற்றும் பாரத நாட்டின் மரபில், வரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அக்.11ம் தேதி முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வரும் புஷ்கரணியை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

தாமிரபரணியைப் போற்றி, தாமிரபரணி மாஹாத்மியம் என்னும் பழைய நூலே உள்ளது. தற்போது, தாமிரபரணியைப் போற்றி ஒரு பாடலையும் கொடுத்துள்ளார் தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்த நெல்லை மண்ணின் மைந்தர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நதிப் பாடலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், அருண் கணேஷ் இசை கோர்வையில், கவிநேசன் வெள்ளத்துரை வரிகளில், அனந்து, முகேஷ், நெல்லை ஸ்ரீராம் மற்றும் பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடிய பாடல் இப்போது நெல்லை மாவட்டத்தில் ஹிட் அடித்து வருகிறது.

பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை…!

அந்த ரிங்டோன்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories