புஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’

Published:

tanirabarani e1537928935362 - 2026

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது கலக்கி வருகிறது ஒரு ரிங் டோன். பலரும் தங்கள் மொபைல்களில் தாமிரபரணியைப் போற்றும் ரிங்டோனை வைத்து பெருமிதப் பட்டு வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரில் கலந்த ஒரே பொதுச் சொல் ‘தாமிரபரணி’. தாமிரபரணி ஆற்றின் பெயரை உச்சரிக்காமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களின் வாழ்நாளை துவங்குவதில்லை. அப்படி உயிரில் இனிமையாய்க் கலந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் இந்த வருடம் புஷ்கரம் எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடைபெறுகிறது.

நதிகளைப் புனிதமாகப் போற்றும் பாரத நாட்டின் மரபில், வரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அக்.11ம் தேதி முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வரும் புஷ்கரணியை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

தாமிரபரணியைப் போற்றி, தாமிரபரணி மாஹாத்மியம் என்னும் பழைய நூலே உள்ளது. தற்போது, தாமிரபரணியைப் போற்றி ஒரு பாடலையும் கொடுத்துள்ளார் தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்த நெல்லை மண்ணின் மைந்தர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நதிப் பாடலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், அருண் கணேஷ் இசை கோர்வையில், கவிநேசன் வெள்ளத்துரை வரிகளில், அனந்து, முகேஷ், நெல்லை ஸ்ரீராம் மற்றும் பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடிய பாடல் இப்போது நெல்லை மாவட்டத்தில் ஹிட் அடித்து வருகிறது.

பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை…!

அந்த ரிங்டோன்கள்…

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img