நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எடுத்த முடிவைப் போல், பெரம்பலூர் கிராம பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருப்புமுனையான முடிவாகவே பார்க்கப் படுகிறது.
இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, வ.களத்தூர் கிராமத்தில், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று கூறி, தேரோட்ட வீதியில் சாமி சப்பரம் செல்வதற்கு தடை விதித்தது காவல் துறை. இதை அடுத்து, உள்ளூர் மக்கள் கொதித்தனர். போராட்டக்களத்தில்இந்து முன்னணி குதித்தது.
தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு உள்ளது என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ராஜ வீதியில் சுவாமி சப்பரம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் காவல் துறை தெரிவித்தது. மேலும் சாமி சப்பரம் எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று முஸ்லீம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.
காவல்துறை அதிகாரிகள் முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று மூன்று நாள் செல்லும் சாமி சப்பரத்தை ஒரே நாளில் மூன்று சாமியையும் ஒரே சப்பரத்தில் வைத்து இந்தத் திருவிழாவை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகளை வற்புறுத்தினர்.
அதை எதிர்த்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர். தங்கள் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை இஸ்லாமியர்கள் நசுக்குவதாகக் கூறி, போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி களத்தில் இறங்கியது. தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.


