வழிபாட்டு உரிமை மறுப்பு: நியாயம் கோரி இந்துக்கள் பெரம்பலூரில் உண்ணாவிரதம்!

perambalur vakalathur - 2026

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி இன்று பெரம்பலூரில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர்த் திருவிழா வானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள  மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் 3 நாட்கள் நடத்தக் கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரினர். இந் நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

perambalur vakalathur people protest - 2026

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர்ப் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக் கோரியும்
  • தேரோடும் வீதியில் வேற்று மத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக் கோரியும்…
  • பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும்

இன்று (26.09.2018) வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெறும். அருகில் உள்ள இந்து சமுதாய மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories