December 6, 2025, 6:30 AM
23.8 C
Chennai

முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி?! விளக்கம் கேட்டு வேலூர் போலீஸுக்கு ஐ.ஜி. நோட்டீஸ்

11 Aug27 CM edapadi e1535649894796 - 2025

வேலூர்:  திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப் பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ஐஜி.,யிடம் இருந்து அதிரடியாக வேலூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமி திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற போது, காட்பாடியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விளக்கம் கேட்டு போலீசாருக்கு வடக்கு மண்டல ஜஜி நோட்டீஸ்  வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். பின் திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலத்திற்கு சென்றார். அப்போது,  தமிழக எல்லையான காட்பாடி சில்க்மில் பகுதியில் அதிமுக.,வினர் வரவேற்பு அளித்தனர்.

அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.

இதனால் சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு முதல்வரும் காரில் இருந்து இறங்கினார்.  அப்போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முதல்வர் மேடைக்கு செல்லாமல், மீண்டும் காரில் ஏறி சேலம் புறப்பட்டுச் சென்றார்.

தள்ளுமுள்ளு சம்பவத்துக்கு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என கூறப்பட்டது.  இந்நிலையில் காட்பாடி சில்க்மில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உட்பட 50 போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நோட்டீஸ் அனுப்பி  உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories