சபரிமலை: மக்களின் உணர்வை மதித்து தீர்வு காண ராம.கோபாலன் கோரிக்கை

ramagopalan2 - 2026

சென்னை: மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசும் நீதிமன்றமும் சபரிமலை விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு.. இந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..

சபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது  முரண்பட்ட பார்வை.

பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

எல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார்? என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட.

மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

கட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன்? நீதிபதியும் மனிதர்தானே? என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா?

ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார்? அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும்?

அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக் கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.

பக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories