December 5, 2025, 2:56 PM
26.9 C
Chennai

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!

12 Aug 05 High court - 2025

மதச் சடங்குகளில் தலையிடுவதில், நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11ஆவது ஜீயராக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று விதேக முக்தியடைந்தார். அதன் பின்னர்,  அந்த ஆசிரமத்தின் 12ஆவது ஜீயராக, ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது நியமனத்தை அறிவிக்கும் வகையில் அக்டோபர் 21 ஞாயிறு அன்று பட்டாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னை ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் வெங்கடவரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “2015ஆம் ஆண்டு பதினொன்றாவது ஜீயர் ரங்க ராமானுஜ தேசிகர் எழுதி வைத்த உயிலின்படி, தனக்குப் பிறகு ஜீயராக நியமிக்க மூன்று பேரைப் பரிந்துரை செய்திருந்தார். அதில் ஒருவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். மீதமுள்ள அந்த இருவரையும் ஜீயராக நியமிக்காமல், மூன்றாவது நபரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

உயிலில் கூறப்பட்டபடி நியமனம் நடைபெற வில்லை எனவும், மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த ஆசிரமம் மத அமைப்பு என்பதால், இது தொடர்பில் பொது நல வழக்காக தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். “இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது. சிவில் வழக்குதான் தொடர முடியும்” என்று தெரிவித்தனர்.

மேலும், மதச் சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு  ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்டோர்க்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories