சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்

14 June27 sengottaiyan - 2026

சமூக நலத்துறையுடன் இணைந்து அங்கன்வாடி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG, UKG கற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் விரைவில் நிறைவேற்றப்படும். இதில் தவறு நடைபெற்றதாக செய்திகள் வருகிறது! அப்படி எதுவும் தவறு நடைபெறவில்லை- என்று, வேலூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.

9, 10, 11,12- ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து வகுப்பிலும் கணினி மயமாக மாற்றி இணைய சேவை செய்ய நடவடிக்கை எடுத்து, தற்போது 4 மாவட்டங்களில் 300 பள்ளிகளில் இணைய சேவை இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதேபோல் முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு ஜனவரி மாதத்திற்குப் பிறகு சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து அங்கன்வாடி மையங்களில் இருக்கக்கூடிய 52,412 மாணவர்களுக்கு LKG, UKG கற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறோம்.

அன்டல்டிங்கர் என்ற புதிய பாடத் திட்டத்தை அறிவியல் மூலமாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு 12வது மாணவர்களுக்கு ஸ்கில் டிரைனிங் மூலம் 12 பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த உடனேயே வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

உபரி ஆசிரியர்களை அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது!அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிரப்பப் படாமல் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் 7500 ரூபாய் ஊதியத்தில் நிரப்ப உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் விரைவில் நிறைவேற்றப்படும். இதில் தவறு நடைபெற்றதாக செய்திகள் வருகிறது. அப்படி எதுவும் தவறு நடைபெறவில்லை. இதில் ஏற்பட்டுள்ள தவறு என்னவென்றால் தமிழில், ராணுவத்தினர், விதவைகள் சான்றுகள் சரியாக வழங்கப்படவில்லை. இந்த சான்றுகளை கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம்தான் வழங்க வேண்டும் என ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை பெற்றுத் தராததால் பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இவ்வாறு வேலூரில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories