December 5, 2025, 12:49 PM
26.9 C
Chennai

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

crackers - 2025

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சிறு குறு தொழிலகங்கள் அதிகம் உள்ள இடங்களாக, மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவையும் தென்மாவட்டமான விருதுநகரின் சிவகாசியும் விளங்குகின்றன. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த இந்த நகரங்களில் தற்போது, வேலையிழப்பும் வேலைத் தட்டுப்பாடும் உருவாகிவருகிறது.

குறிப்பாக, சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் அச்சகத் தொழிலும் மிக முக்கியமான தொழில்களாக அமைந்து, வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கித் தந்தன. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி அளிப்பதற்கென கல்விக் கூடங்கள், கல்லூரிகள் என பட்டாசு ஆலை நிர்வாகங்களாலேயே அமைக்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலும் நாடார் சமூக மக்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நாடார் சமூக மக்களிடையே கிறிஸ்துவ பிரசாரமும் அதிகம் உண்டு. இந்து நாடார் கிறிஸ்துவ நாடார் என மத ரீதியாக சமூக மக்களைப் பிரித்து வைத்து, தொழில் வாய்ப்புகளை வழங்கியதும் உண்டு. ஆனால், அதிலும் வேட்டு வைக்கும் முகமாக, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே, வெடி வெடிப்பதற்கு எதிராக கிறிஸ்துவ பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், சிறுவர்களிடம் ஒரு பிரசாரமே நடைபெற்றது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வழக்கு தொடுத்து, இந்த முறை தீபாவளிக்கு 2 மணி நேரமே வெடிகள் வெடிக்கப் பட வேண்டும் என்று கால வரையறை கொடுத்து தீர்ப்பு பெறப் பட்டது. இதை அடுத்து பட்டாசு விற்பனை இந்த வருடம் மிக மந்தமானது. சென்ற வருடம் தயார் செய்து வைத்திருந்த பட்டாசுகளே இந்த வருடத்துக்கும் அடுத்த வருடத்துக்குமே போதுமானதாக இருந்த நிலையில், மேலும் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த முறை 30 சதவீத பட்டாசுகளே சென்னை தீவுத் திடலில் விற்பனையானதாக கூறப் பட்டது. மதுரை, கோவை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் பட்டாசு விற்பனை பாதிக்கும் குறைவாக பாதிக்கப் பட்டது.

இந்த நிலையில், வேறு வழியின்றி, 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப் படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் வேலையிழப்பை சமாளிப்பது குறித்து அடுத்து அரசும் பட்டாசு ஆலை உரிமையாளர்களும்தான்  முடிவு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories