இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

crackers - 2026

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சிறு குறு தொழிலகங்கள் அதிகம் உள்ள இடங்களாக, மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவையும் தென்மாவட்டமான விருதுநகரின் சிவகாசியும் விளங்குகின்றன. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த இந்த நகரங்களில் தற்போது, வேலையிழப்பும் வேலைத் தட்டுப்பாடும் உருவாகிவருகிறது.

குறிப்பாக, சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் அச்சகத் தொழிலும் மிக முக்கியமான தொழில்களாக அமைந்து, வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கித் தந்தன. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி அளிப்பதற்கென கல்விக் கூடங்கள், கல்லூரிகள் என பட்டாசு ஆலை நிர்வாகங்களாலேயே அமைக்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலும் நாடார் சமூக மக்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நாடார் சமூக மக்களிடையே கிறிஸ்துவ பிரசாரமும் அதிகம் உண்டு. இந்து நாடார் கிறிஸ்துவ நாடார் என மத ரீதியாக சமூக மக்களைப் பிரித்து வைத்து, தொழில் வாய்ப்புகளை வழங்கியதும் உண்டு. ஆனால், அதிலும் வேட்டு வைக்கும் முகமாக, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே, வெடி வெடிப்பதற்கு எதிராக கிறிஸ்துவ பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், சிறுவர்களிடம் ஒரு பிரசாரமே நடைபெற்றது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வழக்கு தொடுத்து, இந்த முறை தீபாவளிக்கு 2 மணி நேரமே வெடிகள் வெடிக்கப் பட வேண்டும் என்று கால வரையறை கொடுத்து தீர்ப்பு பெறப் பட்டது. இதை அடுத்து பட்டாசு விற்பனை இந்த வருடம் மிக மந்தமானது. சென்ற வருடம் தயார் செய்து வைத்திருந்த பட்டாசுகளே இந்த வருடத்துக்கும் அடுத்த வருடத்துக்குமே போதுமானதாக இருந்த நிலையில், மேலும் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த முறை 30 சதவீத பட்டாசுகளே சென்னை தீவுத் திடலில் விற்பனையானதாக கூறப் பட்டது. மதுரை, கோவை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் பட்டாசு விற்பனை பாதிக்கும் குறைவாக பாதிக்கப் பட்டது.

இந்த நிலையில், வேறு வழியின்றி, 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப் படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் வேலையிழப்பை சமாளிப்பது குறித்து அடுத்து அரசும் பட்டாசு ஆலை உரிமையாளர்களும்தான்  முடிவு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories