திடீரென தீப்பிடித்த தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி வந்த லாரி… குளத்துக்குள் இறக்கி தப்பிய டிரைவர்!

lorry fire kovilpatti - 2026

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி வந்த லாரியில் தீடீரென தீ பிடித்தது. இதனால் அருகில் இருந்த குளத்தில் லாரியை இறக்கி கவிழ்த்துவிட்டு, அதில் இருந்து குதித்துத் தப்பினார் லாரி டிரைவர்.
.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் சுகுமார் (32). லாரி டிரைவரான இவர் இன்று கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் தீப்பெட்டி ஆலையில் இருந்து தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிக்கொண்டு, ராஜஸ்தானுக்கு சென்று கொண்டு இருந்தார்.

லாரி காலாங்கரைப்பட்டியை கடந்து வந்த போது, தீப்பெட்டி பண்டல்கள் மீது மரக்கிளைகள் உரசியுள்ளன. இதில் தீப்பெட்டி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதை கவனிக்காமல் சுகுமார் லாரியை ஓட்டிச் சென்றார். இதனால் சாலையில் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து கீழே விழுந்து கொண்டே வந்தன.

அப்போது சாலையோரம் நடந்து சென்ற சிலர் பார்த்து, லாரியில் தீப்பிடித்து எரிவது குறித்து அவரிடம் கூறினார். உடனடியாக அவர் லாரியை வானரமுட்டி கோயில் அருகே உள்ள ஆயா ஊருணியில் லாரியை இறங்கி விட்டு, லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பாளர் முருகானந்தம் தலைமையிலும், கழுகுமலை தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் பொன்ராஜ் தலைமையிலும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories