திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் மிகவும் பரபரப்பான பஜார் பகுதியில், பாம்பே ஸ்டோர் பின்பக்கம் உள்ள கணேசன் 40/18 S/O இசக்கி கம்பர், தென்காசி – கோவில் பூசாரிக்கு சொந்தமான ஆட்கள் யாரும் இல்லாத ஓட்டு வீட்டில் இன்று மாலை சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்திருந்தார்கள்.
அந்த விளக்கு திடீரென கொளுந்து விட்டு எரிந்து தீ பிடித்து வீடு முழுவதும் எரிந்து விட்டது. பின்னர் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்த தீயணைப்புத் துறையினர் முழுவதுமாக தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் உயிருக்கு எந்த சேதமும் இல்லை.