அம்பானிக்காக ஆகம விதிமீறலா? ராமேஸ்வரத்தில் வெடித்த சர்ச்சை!

mukesh ambani rameswaram - 2026

ராமேஸ்வரம்: அம்பானிக்காக ஆகம விதி மீறலா என்று கேட்டு ராமேஸ்வரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்திருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்காக, ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று மதியம் 12 50க்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் ஆணையர் மங்கையர்க்கரசி நந்தி மண்டபத்தில் வைத்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் தொடர்பாக சிறப்பு பூஜைகளைச் செய்துவிட்டு, ஆலயத்தில் அழைப்பிதழை சமர்ப்பிப்பதற்காக அவர்கள் வந்தனர்.

இருவரும் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு 1.50க்கு திரும்பினர். பொதுவாக, கோவிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3.30க்கு மீண்டும் திறக்கப்படும். ஆனால்  மதியம் 2 மணி வரை கோயில் திறந்திருந்தது என்று இப்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சரவணன் இது குறித்துக் கூறிய போது. கோயிலைக் கட்டிய மன்னர்கள் வந்த போது கூட, ஆகம விதியை மீறாமல் தரிசனம் செய்ததாக வரலாறு இருக்கிறது. ஆனால் தொழிலதிபர் ஒருவரின் தரிசனத்துக்காக மதியம் 2 மணி வரை கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது நிச்சயமாக ஆகம விதிக்குப் புறம்பானதுதான். இதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அம்பானி வந்து போன பின்னர் இப்போது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories