அம்பானிக்காக ஆகம விதிமீறலா? ராமேஸ்வரத்தில் வெடித்த சர்ச்சை!

mukesh ambani rameswaram - 2026

ராமேஸ்வரம்: அம்பானிக்காக ஆகம விதி மீறலா என்று கேட்டு ராமேஸ்வரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்திருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்காக, ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று மதியம் 12 50க்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் ஆணையர் மங்கையர்க்கரசி நந்தி மண்டபத்தில் வைத்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் தொடர்பாக சிறப்பு பூஜைகளைச் செய்துவிட்டு, ஆலயத்தில் அழைப்பிதழை சமர்ப்பிப்பதற்காக அவர்கள் வந்தனர்.

இருவரும் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு 1.50க்கு திரும்பினர். பொதுவாக, கோவிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3.30க்கு மீண்டும் திறக்கப்படும். ஆனால்  மதியம் 2 மணி வரை கோயில் திறந்திருந்தது என்று இப்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சரவணன் இது குறித்துக் கூறிய போது. கோயிலைக் கட்டிய மன்னர்கள் வந்த போது கூட, ஆகம விதியை மீறாமல் தரிசனம் செய்ததாக வரலாறு இருக்கிறது. ஆனால் தொழிலதிபர் ஒருவரின் தரிசனத்துக்காக மதியம் 2 மணி வரை கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது நிச்சயமாக ஆகம விதிக்குப் புறம்பானதுதான். இதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அம்பானி வந்து போன பின்னர் இப்போது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories