செங்கோட்டை-புனலூர் அகலரயில்பாதை பணி முடிய 2ஆண்டுகள் ஆகும்

Published:

00219_mpeg2video தென்காசி: விருதுநகர் , சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களை நவீன கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்க ரூபாய்.2.46 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் கடந்த மாதம் முடிந்தன. அதனைத் தொடர்ந்து , தென்காசி ரயில் நிலையத்தில் ஆப்டிக்கல் அறை  திறப்பு விழா இன்று  நடைபெற்றது. தென்னக ரயில்வே தலைமை சிக்னல் கட்டுப்பாட்டு பொறியாளர் சிவா பிரசாத் அதனைத் திறந்து வைத்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர்.சுனில்குமார் கார்க் நிருபர்களிடம் கூறும் போது: பி.எஸ்.என்.எல்.சேவையைப்போல் இண்டர் நெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கும் வகையில் இந்த ஆப்டிக்கல் இணைப்பு அரை தொடங்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ரயில்வேக்கும்,மக்களுக்கும் பல்வேறு வசதிகள் கிடைக்கும், செங்கோட்டை முதல் புனலூர் வரை நடக்கும் அகல ரயில்பாதை பணிகள் முடிய இன்னும் 2ஆண்டுகள் ஆகும்.. என்றார். 00222_mpeg2video 00238_mpeg2video

Related articles

Recent articles

spot_img