சென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி!

hindu spiritual - 2026

சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற பண்பை மையமாகக் கொண்டு 10-வதுஆன்மிக சேவைக் கண்காட்சி சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.

இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

hindu spiritual4 - 2026

தொடர்ந்து இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை தலைவரும் தேனி தட்சிணாமூர்த்தி வித்யாபீடத்தின் அதிபதி சுவாமி ஓம்காரானந்தர், தருமபுர இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர், ஆரணி அருகே உள்ள திருமலை சமண மடாதிபதி ஸ்ரீதவள கீர்த்தி சுவாமிகள், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினார்கள்.

hindu spiritual2 - 2026

விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் புதன்கிழமை இன்று காலை 10 மணி அளவில் ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தில் ‘கோ-கஜ-துளசி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக் கிழமை நாளை பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தில் ‘மாத்ரு பித்ரு, அதிதி- ஆச்சார்யா வந்தனம்’ நிகழ்ச்சி நடக்கிறது.

hindu spiritual1 - 2026

தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் ‘ சிறுமியரைப் போற்றும் கன்யா வந்தனம்’, ‘ தாய்மார்களைப் போற்றும் சுவாசினி வந்தனம்’ ஆகியவை நடைபெறுகிறது.

பிப்ரவரி 2-ஆன் தேதி சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தில் ‘கங்கா- பூமி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது, 3-ஆம் தேதி நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற கருத்தில் ‘பாரத மாதா- பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும், 4-ஆம் தேதி வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தில் ‘விருட்ச- நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.

கண்காட்சி வளாகத்தில் தினசரி கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பகல் 3.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலும், இரவு 6 மணியில் இருந்து 8.30 மணி வரையிலும் பல்வேறு மாநில கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. ‘மூவர்ணம் மற்றும் வேலுநாச்சியார் வரலாற்று நாட்டிய நாடகம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம்’ நிகழ்ச்சியும், அந்தமான் சிறையை கண்முன்னே நிறுத்தும் அரங்கம், ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒளி, ஒலி காட்சி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories