சென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி!

Published:

hindu spiritual - 2026

சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற பண்பை மையமாகக் கொண்டு 10-வதுஆன்மிக சேவைக் கண்காட்சி சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.

இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

hindu spiritual4 - 2026

தொடர்ந்து இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை தலைவரும் தேனி தட்சிணாமூர்த்தி வித்யாபீடத்தின் அதிபதி சுவாமி ஓம்காரானந்தர், தருமபுர இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர், ஆரணி அருகே உள்ள திருமலை சமண மடாதிபதி ஸ்ரீதவள கீர்த்தி சுவாமிகள், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
hindu spiritual2 - 2026

விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் புதன்கிழமை இன்று காலை 10 மணி அளவில் ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தில் ‘கோ-கஜ-துளசி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக் கிழமை நாளை பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தில் ‘மாத்ரு பித்ரு, அதிதி- ஆச்சார்யா வந்தனம்’ நிகழ்ச்சி நடக்கிறது.

hindu spiritual1 - 2026

தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் ‘ சிறுமியரைப் போற்றும் கன்யா வந்தனம்’, ‘ தாய்மார்களைப் போற்றும் சுவாசினி வந்தனம்’ ஆகியவை நடைபெறுகிறது.

பிப்ரவரி 2-ஆன் தேதி சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தில் ‘கங்கா- பூமி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது, 3-ஆம் தேதி நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற கருத்தில் ‘பாரத மாதா- பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும், 4-ஆம் தேதி வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தில் ‘விருட்ச- நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

கண்காட்சி வளாகத்தில் தினசரி கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பகல் 3.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலும், இரவு 6 மணியில் இருந்து 8.30 மணி வரையிலும் பல்வேறு மாநில கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. ‘மூவர்ணம் மற்றும் வேலுநாச்சியார் வரலாற்று நாட்டிய நாடகம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம்’ நிகழ்ச்சியும், அந்தமான் சிறையை கண்முன்னே நிறுத்தும் அரங்கம், ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒளி, ஒலி காட்சி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img