மார்ச் 1 ஆம் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி!

modi coimbatore - 2026

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம், பிப்.19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணத்தை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார். விடுப்பே எடுக்காத பிரதமர் என்று பெயர் வாங்கியுள்ள பிரதமர் மோடி, தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜன.27 ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி.

பின்னர், பாஜக., பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். தொடர்ந்து கடந்த ஞாயிறு பிப்.10இல் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து வரும் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதாக இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் குமரி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார் என்றார்.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று வைகோ கூறியிருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று பாஜக.,வினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோடியின் பயண மாறுதலை அடுத்து, கருப்பு காவிக்கொடிகளின் ஆர்ப்பாட்ட அரசியலும் நாள் மாற்றப்படக் கூடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Topics

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Entertainment News

Popular Categories