December 6, 2025, 6:49 AM
23.8 C
Chennai

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்து முன்னணி அஞ்சலி!

tenkasi anjali - 2025

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தேசப் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் 40 பேருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியை இன்று இந்து முன்னணி நடத்தியது.

தென்காசி இந்து முன்னணி சார்பில் இன் பாரத பாதுகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது! இதில் மத்திய அரசு வழக்கறிஞர் சாக்ரட்டீஸ், நகர தலைவர் இசக்கிமுத்து, நகர பொதுச் செயலாளர் நாராயணன், மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இந்து ஆட்டோ முன்னணியினர் மற்றும் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

nellai anjali - 2025

தேசத்திற்காக தன்னுயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நெல்லை ஜங்ஷனை அடுத்த  சிந்துபூந்துறை யில் நெல்லை மாநகர் இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாம் மகிழ்வோடு சுதந்திரமாய் வாழ எல்லையில் தன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தேசிய கடமையாற்றுவோம் என்று அப்போது கூறப் பட்டது.

திருநெல்வேலி இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், இந்து முன்னணி பொறுப்பாளர்களுடன் பாஜக., விஎச்பி., அமைப்பினரும் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

hmk kovai anjali e1550240418509 - 2025

இதே போன்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவையில் நடத்தப் பட்டது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் ஜவான் பவன் முன்பு பந்தையச்சாலை காவல் நிலையம் அருகில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்டு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்; பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப் பட்டது. பலியான வீரர்களுக்கு நம்முடைய வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம் என்று  கூறி, ராணுவ வீரர்களின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மோட்ச தீபம் ஏற்றி மலர் வழிபாடு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories