கோவை: பல்லடம் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்கள் இன்று கொடைக்கானல் செல்ல தனியார் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த வேன், பல்லடம் லட்சுமி மில் அருகே வந்தபோது தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பார்சல் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்தக் கோர விபத்தில் வேன் ஓட்டுனர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

