கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25 அடி ஆழத்துக்குக் கீழே மணலை திருட்டுத்தனமாக எடுக்கும் வேலையில் மாலகுப்பம், கரடிகுறி, பூசாரிப்பட்டி, கல்லுகுறி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே கரடிகுறி அருகிலுள்ள மாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (45) நேற்று காலை மணல் எடுக்கும் வேலையில் ஈடுபட்டார். இதற்காக அங்கே தோண்டப்பட்டிருந்த 25 அடி ஆழ குழியில் கயிறு கட்டி உள்ளே இறங்கினார். குழிக்கு மேலே மணற்பரப்பில் 2 பேர் அவர் எடுத்துக் கொடுக்கும் மணலை வாங்குவதற்காக தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் திடீரென, அந்தக் குழியின் பக்கவாட்டில் உள்ள மண் முழுதாகச் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி அலறினார். ஆனால் அதற்குள் அவர் மண்ணில் புதைந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதைக் கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மகராஜகடை காவல் நிலையத்துக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொக் லைன் இயந்திரம் மூலம், குழிக்குள் மூடிக்கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், மண்ணுக்குள் புதைந்து கிடந்த ராமசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகராஜ கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 min.Read
மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...
கட்டுரைகள்
முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...
கட்டுரைகள்
முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
உரத்த சிந்தனை
வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

