குண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்!

srilanka blast - 2026

தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்த நிலையில், “மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று,  இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.

தொடர் குண்டு வெடிப்பின்போது இலங்கையில் சிக்கி உயிர் தப்பினார் திருப்பூர் தி.மு.க. பிரமுகர் செல்வராஜ்! இவர் இலங்கையில் இருந்து திருப்பூர் திரும்பிய நிலையில், தாம் மயிரிழையில் உயிர் தப்பியதாகக் கூறினார்.

தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர்  இலங்கைக்குச் சென்றிருந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்வுகளின் போது, அங்கிருந்தவர்கள், உயிர் தப்பிய நிலையில் ஊர் திரும்பினர்.   குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த செல்வராஜ் தனது திகில் அனுபவங்களை செய்தியாளர்களிடம் கூறிய போது…

bombblast srilanka church - 2026இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லலாம் என்று கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் கூறினார்கள்.  நான் வெளிநாடு எதுவும் சென்றதில்லை. இதனால் முதல் முறையாகச் செல்வதால், அருகில் உள்ள இலங்கைக்கு செல்வோமே என்று அனைவரும் முடிவு செய்தோம்.

தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டோம். அன்று இரவே இலங்கை போய்ச் சேர்ந்தோம்.

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

என்னுடன் கட்சியின்  வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்குமார், மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, 6-வது வார்டு செயலாளர் மணி, ஓட்டல் அதிபர் முருகானந்தம் என நண்பர்களும் உடன் வந்தனர்.   நாங்கள் கொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம்.

என்னுடன் மேலும் இருவர் ஹோட்டலின் 7-வது மாடியிலும், மீதமுள்ள 3 பேர் 6-வது மாடியிலும் தங்கியிருந்தோம். 21-ஆம் தேதி காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு காலை டிபன் சாப்பிடலாம் என ஓட்டலின் கீழ்த் தளத்துக்கு செல்ல தயாராக இருந்தோம். அந்த நேரம்..  காலை 8.45 மணி … ஹோட்டலின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

hotel bombblast - 2026அந்த ஹோட்டல் கட்டடமே குலுங்கியது. ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது.

இதைப் பார்த்து பயந்த நாங்கள், முதலில் ஏதோ சுனாமி வந்து விட்டதோ என்று திகிலடைந்தோம். பின்னர் கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் எங்கள் அறைக்கு விரைந்து வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

ஹோட்டல் கீழ்த் தளத்தில் எங்கும் மரண ஓலம்! ரத்தம் எல்லா இடங்களிலும் சிதறியிருந்தது. முதலில் ஏதோ கேஸ் சிலிண்டர்தான் வெடித்தது என்று கூறினார்கள். அதன் பிறகே வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்தது.

உணவு உண்பதற்காக சரியாக நாங்கள் கீழ்த்தளம் செல்ல இருந்த நேரத்தில்தான் இந்த குண்டு வெடிப்பும் நடந்துள்ளது. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கு செல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை.

பின்னர் எங்கள் ஆறு பேரையும் கிங்ஸ்பரி ஓட்டலில் இருந்து வேறோர் இடத்தில் தங்க வைத்தனர். பாஸ்போர்ட்டை மட்டும் நாங்கள் கையில் வைத்திருந்தோம். உடமைகள் அனைத்தும் கிங்ஸ்பரி ஓட்டல் அறையில் இருந்தன. பின்னர் உடமைகளை எடுத்துக் கொண்டு தாஜ் ஹோட்டலில் எடுத்துச் சென்று தங்க வைத்தனர்.

வெளியில் என்ன நடக்கிறது என்று அறிய முடியவில்லை.  குடும்பத்தினரும் நண்பர்களும் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை தெரிவித்தோம். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வெளியே செல்ல முடியாத நிலை. ஆனால், நேரத்துக்கு சரியாக சாப்பாடு மட்டும் வந்து சேர்ந்தது.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

srilanka suicide - 2026எனக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே தமிழ் பேசும் செவிலியர்கள் கூறியதைக் கேட்ட பின் தான் தொடர் குண்டு வெடிப்பில் மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

நாங்கள் 23ஆம் தேதி இந்தியா திரும்ப ஏற்கெனவே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், காலை  இலங்கையில் இருந்து கிளம்பி மதியம் 2.45க்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். கோவை மண்ணை மிதித்த பின்னரே எனக்கு உயிர் வந்தது…. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories