போதையில் ஒருவரைத் தள்ளி கொலை செய்த வழக்கு… எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது!

francis krupa - 2026

சென்னை கோயம்பேட்டில் போதையில் ஒருவரைத் தள்ளி விட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்றில் தொடர்புடையதாக எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கோயம்பேடு அருகில் மே.5 ஞாயிறு நேற்று இரவு இருவருக்கிடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவருக்குமிடையே கைகலப்பு நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஒருவர் கீழே விழுந்து, உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக கோயம்பேடு போலீசார் பலரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, போதையில் தள்ளிவிட்டார் என்று குறிப்பிடப் பட்ட நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், அந்த நபர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது. ஜெ. பிரான்சிஸ் கிருபா, நவீன கவிஞர். புதுக்கவிதைகள் எழுதுவார். பலராலும் நன்கு அறியப் பட்டவர். கவிதை, புதினம் என இயங்குபவர். மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினமாக விருது பெற்றது. 2008ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர் இவர்.francis krupa2 - 2026

இந்நிலையில், பிரான்சிஸ் கிருபா இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப் பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் இறந்து போன நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப் படுகிறது.

Update: சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவரை கொலை செய்ததாக எழுந்த புகாரில் இருந்து எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்  பட்டுள்ளார். இறந்தவர் வலிப்பு நோயால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories