அதிமுக., தோல்விக்கு பாஜக., கூட்டணி காரணமா?!

edappadi - 2026

அதிமுக 2019ல் இவ்வளவு மோசமாகத் தோற்றதற்குக் காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் என்று ஒரு கோட்பாட்டை இப்போது எடுத்து விட ஆரம்பித்திருக் கிறார்கள்.

அதிமுக தனியாகவோ அல்லது பாமகவுடன் மட்டும் கூட்டணி வைத்து நின்றிருந்தாலோ கூட இதைவிட அதிக பாராளுமன்ற இடங்கள் பெற்றிருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இந்த “லாஜிக்” தோல்விக்கு மட்டும் தான்; அதிமுக போட்டியிட்ட 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 9 இடங்களை வென்று மாநில ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே, கூட்டணி அமைத்து திமுக-எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருந்ததும் அதற்கு முக்கியக் காரணம் என்பது போன்ற பேச்சே இல்லை.

அதாவது, வென்றாலும் தோற்றாலும் என்ன இழவானாலும் அதை பாஜக எதிர்ப்பு, மோதி எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு என்பதோடு முடிச்சு போட்டு சித்தரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்று மண்டலமுமே விஷவாயுவால் சூழப்பட்டிருக்கிறது.

எப்படியானாலும் அடுத்து மோதி தான் பிரதமராகப் போகிறார் என்பது 2019 மார்ச் மாதத்திலேயே ஏறக்குறைய பரவலாக தெரிந்து விட்டது. பாஜக எத்தனை இடங்கள் பெறும், தனியாகவே பெரும்பான்மை கிடைக்குமா அல்லது கூட்டணி உதவி / வெளி ஆதரவு தேவைப்படுமா – இந்த விஷயங்கள் குறித்து தான் சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

எனவே, அதிமுகவும் தமிழ்நாட்டின் மற்ற குட்டி கட்சிகளும் கூட்டணி வைத்தது ஜெயிக்கும் கட்சியுடன் தானே தவிர ஏதோ சொங்கியான கட்சியுடன் அல்ல. அந்த சாதக அம்சத்தை வைத்து உருப்படியாக பிரசாரம் செய்து உழைப்பைச் செலுத்தி வெற்றி வாய்ப்புக்கு பக்கத்தில் வர முடியவில்லை என்றால், அதிமுக, பாமக ஆகிய இந்த கட்சிகள் பிறகு என்ன ***க்கு தங்களுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு, இவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று பீற்றிக் கொண்டார்கள்?

modi edappadi - 2026தமிழ்நாடு பாஜகவின் பலவீனங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை, நன்கு அறிந்ததது தான். செயல் திறன் இன்மை, உழைப்பின்மை, மோதிஜி குறித்த வெறுப்பு பிரசாரங்களுக்கு சரியான பதிலடி தராதது, மத்திய அரசின் சாதனைகளை சரியானபடி விளக்காதது, தலைவர்களின் அதீத ஈகோக்கள் & சுயலாப கணக்குகள், நல்ல தொண்டர்கள் வாய்த்தும் சரியாக பயன்படுத்தாதது, தொண்டர்களுடன் ‘கனெக்ட்’ இல்லாதது – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பாஜக போட்டியிட்ட ஐந்தில் நான்கு தொகுதிகளில் தோல்விக்கு இவற்றைக் காரணமாக சொல்லலாம். கன்னியாகுமரியில் அமைச்சர் பொன்னார்ஜி தோற்றதற்கு – அங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் வேட்பாளர் தங்களுக்குச் செய்த நற்பணிகள், அவரது பண்புநலன் தகுதி எதையுமே பார்க்காமல் குருட்டு மதவெறியுடன் அவருக்கு எதிராக வாக்களித்ததும், சில சாதிய கணக்குகளும் – காரணமாகச் சொல்லப் படுகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

எப்படியானாலும், இந்த ஐந்து தொகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் கூட்டணியின் தோல்விக்கு தமிழ்நாடு பாஜகவைக் காரணமாக சொல்வது சரியான தல்ல. நியாயமுமல்ல. துரதிர்ஷ்டவசமாக சில பாஜக ஆதரவாளர்களும் கூட இந்த ரீதியில் பேசுவது வருத்தத்திற்குரியது.

தமிழ்நாட்டின் தற்போதைய எல்லா அரசியல் “கண்ணோட்டங்களும்” அதிமுக, பாமக கட்சிகள் அவை போட்டியிட்ட பாராளுமன்ற இடங்களில் பெற்ற படு தோல்விக்கு பாஜகவை பலிகடாவாக ஆக்குவதிலேயே குறியாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

அந்தக் கட்சிகள் நேரடியாக இப்படிச் சொல்லவில்லை, ஆனால் இத்தகைய பிரசாரத்தை அவை உள்ளூர விரும்புகின்றன, ரசிக்கின்றன என்பது தெளிவு (தேமுதிக அதன் அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, எனவே அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை).

தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைப்பதில் உள்ள மிகப்பெரிய அபாயம் இது. வென்றால், அதை பாஜவுக்கு இந்தக் கட்சிகளால் ஏற்பட்ட சாதகமாக சித்திரிப்பார்கள்.

தோற்றால், பாஜகவுடனான சகவாசம் இந்தக் கட்சிகளை பாதாளத்தில் தள்ளிவிட்டதாக ஒப்பாரி வைப்பார்கள். அடுத்து பாஜக செய்ய வேண்டியது என்ன என்பதைப் பிறகு யோசிக்கலாம். இப்போதைக்கு, தமிழ்நாட்டு அரசியல் சூழலின் இந்த கடைந்தெடுத்த போலித்தனத்தை முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. Damage control என்ற அளவில் இது மிக அவசியம்.

  • ஜடாயு, பெங்களூர்
ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories