December 5, 2025, 9:55 PM
26.6 C
Chennai

ஆன் லைன் சூதாட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தடைசெய்யக் கோரி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை….!

susied - 2025

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன் லையன் ரம்மி விளையாட்டு அதிகரி்த்து அதனால் ஏற்படும் உயிரழப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது.

சமீபத்தில் மதுரை அருகே கணவன்,மனைவி இருவரும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பத்தை அடுத்த தற்போது தாய், மகன் தற்கொலை செய்து கொண்டது. அதிர்ச்சியடை வைத்துள்ளது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டியை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்வேல் இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்து வருகிறார்.

இவரும் மாதம் சுமார் ஓரு லட்சம் வரையில் சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருள்வேலுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்து வந்தாக தெரிகிறது.

தொடக்கத்தில் சிறு தொகையை கட்டி ரம்மி விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் தொடா்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைத்து அதிகளவு பணம் கிடைத்து வந்துள்ளது.

இதனால் தன் கைவசம் உள்ள பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.RAMMY 2 - 2025முதலில் அதிக வெற்றிகளை பெற்று வந்த அருள்வேலுக்கு நாட்கள் செல்ல, செல்ல ஆன்லைன் ரம்மி தன்து கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது.

பணத்தை முழுவது இழக்க தொடங்கிய அருள்வேல், ஆன்லைன் ரம்மிக்கு முழுதும் அடிமையாகியுள்ளார்.

இருந்தாலும் நாம் திறமையாக விளையாடினால் கைவிட்டு போன பணத்தை மீட்டு எடுத்திடலாம் என நினைத்து அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக, சிறுக கடன்களை வாங்கி அதை வைத்து ரம்மி விளையாடி உள்ளார்.

ஆனால் அருள்வேல் நினைத்தபடி வெற்றி கிடைக்காமல் தோல்வியடைந்து பணம் முழுவதையும் இழந்துள்ளார்.

மேலும் ரம்மி விளையாட்டில் தீவிரம் காட்டிய அருள்வேல் வேலையில் கவனத்தை குறைக்க தொடங்கியதால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலையும் பறிபோனது.

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார்.

ஆனால் கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அருள்வேலையும், அவரது தாயார் ராஜலட்சமியையும் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்து இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையிலி் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விபரங்கள் தெரியவந்தாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories