ஆன் லைன் சூதாட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தடைசெய்யக் கோரி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை….!

susied - 2026

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன் லையன் ரம்மி விளையாட்டு அதிகரி்த்து அதனால் ஏற்படும் உயிரழப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது.

சமீபத்தில் மதுரை அருகே கணவன்,மனைவி இருவரும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பத்தை அடுத்த தற்போது தாய், மகன் தற்கொலை செய்து கொண்டது. அதிர்ச்சியடை வைத்துள்ளது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டியை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்வேல் இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்து வருகிறார்.

இவரும் மாதம் சுமார் ஓரு லட்சம் வரையில் சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருள்வேலுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்து வந்தாக தெரிகிறது.

தொடக்கத்தில் சிறு தொகையை கட்டி ரம்மி விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் தொடா்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைத்து அதிகளவு பணம் கிடைத்து வந்துள்ளது.

இதனால் தன் கைவசம் உள்ள பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.RAMMY 2 - 2026முதலில் அதிக வெற்றிகளை பெற்று வந்த அருள்வேலுக்கு நாட்கள் செல்ல, செல்ல ஆன்லைன் ரம்மி தன்து கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது.

பணத்தை முழுவது இழக்க தொடங்கிய அருள்வேல், ஆன்லைன் ரம்மிக்கு முழுதும் அடிமையாகியுள்ளார்.

இருந்தாலும் நாம் திறமையாக விளையாடினால் கைவிட்டு போன பணத்தை மீட்டு எடுத்திடலாம் என நினைத்து அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக, சிறுக கடன்களை வாங்கி அதை வைத்து ரம்மி விளையாடி உள்ளார்.

ஆனால் அருள்வேல் நினைத்தபடி வெற்றி கிடைக்காமல் தோல்வியடைந்து பணம் முழுவதையும் இழந்துள்ளார்.

மேலும் ரம்மி விளையாட்டில் தீவிரம் காட்டிய அருள்வேல் வேலையில் கவனத்தை குறைக்க தொடங்கியதால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலையும் பறிபோனது.

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார்.

ஆனால் கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அருள்வேலையும், அவரது தாயார் ராஜலட்சமியையும் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்து இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையிலி் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விபரங்கள் தெரியவந்தாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories