ஆன் லைன் சூதாட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தடைசெய்யக் கோரி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை….!

susied - 2026

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன் லையன் ரம்மி விளையாட்டு அதிகரி்த்து அதனால் ஏற்படும் உயிரழப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது.

சமீபத்தில் மதுரை அருகே கணவன்,மனைவி இருவரும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பத்தை அடுத்த தற்போது தாய், மகன் தற்கொலை செய்து கொண்டது. அதிர்ச்சியடை வைத்துள்ளது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டியை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்வேல் இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்து வருகிறார்.

இவரும் மாதம் சுமார் ஓரு லட்சம் வரையில் சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருள்வேலுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்து வந்தாக தெரிகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தொடக்கத்தில் சிறு தொகையை கட்டி ரம்மி விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் தொடா்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைத்து அதிகளவு பணம் கிடைத்து வந்துள்ளது.

இதனால் தன் கைவசம் உள்ள பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.RAMMY 2 - 2026முதலில் அதிக வெற்றிகளை பெற்று வந்த அருள்வேலுக்கு நாட்கள் செல்ல, செல்ல ஆன்லைன் ரம்மி தன்து கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது.

பணத்தை முழுவது இழக்க தொடங்கிய அருள்வேல், ஆன்லைன் ரம்மிக்கு முழுதும் அடிமையாகியுள்ளார்.

இருந்தாலும் நாம் திறமையாக விளையாடினால் கைவிட்டு போன பணத்தை மீட்டு எடுத்திடலாம் என நினைத்து அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக, சிறுக கடன்களை வாங்கி அதை வைத்து ரம்மி விளையாடி உள்ளார்.

ஆனால் அருள்வேல் நினைத்தபடி வெற்றி கிடைக்காமல் தோல்வியடைந்து பணம் முழுவதையும் இழந்துள்ளார்.

மேலும் ரம்மி விளையாட்டில் தீவிரம் காட்டிய அருள்வேல் வேலையில் கவனத்தை குறைக்க தொடங்கியதால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலையும் பறிபோனது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார்.

ஆனால் கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அருள்வேலையும், அவரது தாயார் ராஜலட்சமியையும் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்து இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையிலி் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விபரங்கள் தெரியவந்தாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories