திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வில்லிசை கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கி வாழ்த்தி பேசினார் அவர் பேசுகையில் 30 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது முத்தமிழையும் வில்லிசையில் ரசிக்கலாம் கடவுளின் வரலாறு ,தலபுராண சிறப்பு ,அரசர்களின் ஆட்சி விதம் என அனைத்தயும் வில்லிசை கலைஞர்கள் கண் முன்னே கொண்டு வரும் சிறப்புபெற்றவர்கள் ,முன்பெல்லாம் நம் முன்னோர்கள் விழாக்கலங்களில் வில்லிசையை விடிய விடிய கேட்டு ரசிப்பார்கள் இப்போதெல்லாம் இந்த கலையை ரசிக்க மறந்துவிட்ட இந்த தலைமுறை தொலைக்காட்சியில் பெரும் பாலான நேரத்தை செலவு செய்து விடுகின்றனர் ,இந்நிலைமாறி மரபு சார்ந்த கலைகளையும் தேர்ந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் இவ்வாறு பேசினார் விழாவில் ஒன்றிய துணைத்தலைவர் குணம் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி,கீழப்பாவூர் பேரூர் கழக செயலார் பாஸ்கர் ,தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் மதியழகன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் இராதா ,தமிழ்[எ] இராமசாமி ,மற்றும் சுரேஷ் லிகோரி ,உட்டபட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பால்வண்ணபெருமாள் செய்திருந்தார்
நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari