ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Published:

rajini chennai airport pressmeet - 2026

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்  பட்டுள்ளது.

தூத்துக்குடிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூறி வந்தார் ரஜினி. அப்போது இந்த வன்முறைக்கு சமூக விரோத இயக்கங்கள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுதான் காரணம் என்று கூறினார்.

மேலும், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோபமாகப் பேசிச் சென்றார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை என்றார். மேலும், போராட்டம் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும் என்றார். இதனால் மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு கருத்துகளைத் தெரிவித்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வீடு அமைந்துள்ள தெரு முனையில் பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img