தமிழகத்தில் திருநங்கைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவ மையம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு…!

Therunangi 2 - 2026

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவ மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டு மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதிமொழியை மருத்துவர்களுடன் சேர்த்து எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது;
‘தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துமனைகளில் மூன்றாம் பாலினத்தவா்கள் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தலா ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு மருத்துவ மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பிரிவு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ மையத்தில் பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளைப் போலவே தங்ள் மருத்துவ சிகிச்சைகளுக்காக எல்லா வேலை நாட்களிலும் எந்த நேரத்திலும் அரசு பொது மருத்துவமனைகளில் எந்த தயக்கமும் இன்றி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மூன்றாம் பாலினத்தவா்களுக்குத் தேவையான பாலின மாற்று அறுவை சிகி்ச்சை உட்பட அனைத்து பாலின மாற்று சிகிச்சைகள் வழங்கவதே இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ மையத்தின் நோக்கம் ஆகும்.

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சிகிச்சை முறைகள் விரைவாகவும், அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி பெற்றிடவும், இந்த மையம் ஏதுவாக இருக்கும்,

இம்மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவா், நாளமில்லா சுரப்பியல் மருத்துவர், பால்வினை நோய் இயல் மருத்துவர், மனநல மருத்துவர் உட்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழுக்களும் செயல்படும்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

இந்த சிறப்பு பிரிவு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறை எண் 108-ல் வழங்கப்படும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 2016-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 17 நபர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது இந்த சேவை தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி தரமான முறையில் தொடரப்படும்.

எனவே மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,

மேலும் ரூபாய் 134 கோடி மதிப்பில் பாலின மாற்று தொடர் சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள் கூடுதலாக வழங்கப்பட்டு இம்மையம் விரைவில் மேம்படுத்தப்படும்“
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளா் டாக்டர்.பீலாராஜேஷ், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories