டாஸ்மாக் விபரீதம்: தம்பியின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொலைசெய்த அண்ணன்!

tasmac brother killed - 2026மதுபோதையில் தினமும் மது அருந்த பணம் கேட்டு அம்மாவை மிரட்டி வந்த தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப் பட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் சோளியம்மன் கோவில் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நந்தகுமார். வயது 21. இவரது தம்பி கௌதமன் வயது 19.

கௌதமன் எப்போதும் மதுவுக்கு அடிமையாக இருப்பவர். கடந்த சில நாட்களாக மதுபோதையில் பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் . கடந்த மே 30ஆம் தேதி மது போதையில் அவரது அம்மாவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார்.

இதனை அவரது அண்ணன் நந்தகுமாரிடம் தாய் தெரிவித்துள்ளார்.

vangal police station karur - 2026நேற்று ஜூன் 3ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமனை எழுப்பி நந்தகுமார் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது அருகிலிருந்த அம்மிக் கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கியுள்ளார் நந்தகுமார்.

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்! உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கௌதமனை கொண்டு சென்றனர்.

ஆனால் கௌதமன் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். வாங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு நந்தகுமாரை கைது செய்தனர்.

மதுவுக்கு அடிமையான உடன்பிறந்த தம்பியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories