கூலித்தொழிலாளி மகனை அரசு பள்ளியில் சோ்க்க விடாமல் தடுத்து வரும் தனியார் பள்ளியின் அராஜகம்…..!

complaint 2 - 2026

அரசு பள்ளியில் மகனை சேர்த்து படிக்க விடாமல் தடுத்து வரும் தனியார் பள்ளி. பணம் பறிக்கும் நோக்கில் மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு.

சென்னை அரும்பாக்கம் பெருமாள் கோயில் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (43). தள்ளுவண்டியில் தையல் இயந்திரத்தை வைத்து, தெருத் தெருவாக சென்று துணிகள் தைத்து கொடுத்து, பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: எனது மகன் நிவாஸ் (14), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தான். அவனுக்கு கட்டணமாக முதல் தவணையாக ₹10,000 செலுத்தினேன். ஆனால், பள்ளி நிர்வாகம் புத்தக கட்டணம், தேர்வு கட்டணம், நூலக கட்டணம் என்று அரசு அறிவித்த கட்டணத்தை விட அதிகமாக பணம் கட்டும்படி என்னிடம் வலியுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்ட பணத்தை என்னால் தொடர்ந்து கட்டமுடியாமல் மிகவும் அவதிப்பட்டேன்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இதனால், அதிக கட்டணம் செலுத்தி எனது மகனை தனியார் பள்ளியில் படிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அவனை அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தேன்.

இதனையடுத்து எனது மகன் படித்த பள்ளிக்கு சென்று, அவனின் மாற்றுச் சான்றிதழை வழங்கும்படி கேட்டேன். ஆனால், தலைமை ஆசிரியர் சாரதி, உனது மகன் இதுவரை இங்கு படித்ததற்கு கல்வி கட்டணமாக ₹18 ஆயிரம் செலுத்தினால் தான் மாற்றுச் சான்றிதழ் தரப்படும், என்று கராராக கூறிவிட்டனர்.

இதனால், மனமுடைந்த நான், எனது மகன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, வட்டிக்கு கடன் வாங்கி மொத்த தொகையையும் கட்டினேன்.

ஆனாலும், அவனது மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலர்கள், என்னை தகாத வார்த்தையால் பேசி அழைக்கழித்து வருகின்றனர்.

என்னுடைய மகனை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறேன்.

ஆனால் தனியார் பள்ளி நிர்வாகம் அதை தடுக்கிறது. மேலும் பணம் பறிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

எனவே, எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள்.இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட அரும்பாக்கம் போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories