December 6, 2025, 8:03 AM
23.8 C
Chennai

தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்கள் கைது!

bus day - 2025

சென்னையில் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே ஏறியதால், அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கிவிட்டனர்.

இதை அடுத்து, பேருந்தின் மேற்கூரையிலும், ஜன்னல் கம்பிகளிலும் நின்ற படியும், ஆபத்தான முறையில் தொங்கியபடியும் கூச்சல் எழுப்பி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரைப் பார்த்ததும் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று,அவர்களில் 13 பேரை கைது செய்தனர்.

கடந்த வருடம் கைகளில் பட்டாக் கத்தி, வாள் இவற்றை வைத்துக் கொண்டு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் சிலர் ரயில் நிலைய பிளாட்பாரம்களில் தேய்த்த படியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். அவர்களைப் பிடித்த ரயில்வே போலீஸார் பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டதை அடுத்து விடுவித்தனர்.

இந்நிலையில் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. அதில், மாணவர்கள் சிலர் பஸ்ஸின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு பயணிக்கின்றனர். பஸ்ஸுக்கு முன் இரு மாணவர்கள்  ஒரு பைக்கில் செல்கின்றனர். திடீரென பஸ்ஸுக்கு முன் சென்ற பைக் நிலை தடுமாறி நின்றுவிடவே, பஸ் டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் அடிக்கிறார். அதனால் பஸ் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் முன்னே சரிந்து விழுகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, இது ஒன்றே போதும் பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் இணையதள வாசிகள். அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories