தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்கள் கைது!

bus day - 2026

சென்னையில் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே ஏறியதால், அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கிவிட்டனர்.

இதை அடுத்து, பேருந்தின் மேற்கூரையிலும், ஜன்னல் கம்பிகளிலும் நின்ற படியும், ஆபத்தான முறையில் தொங்கியபடியும் கூச்சல் எழுப்பி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரைப் பார்த்ததும் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று,அவர்களில் 13 பேரை கைது செய்தனர்.

கடந்த வருடம் கைகளில் பட்டாக் கத்தி, வாள் இவற்றை வைத்துக் கொண்டு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் சிலர் ரயில் நிலைய பிளாட்பாரம்களில் தேய்த்த படியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். அவர்களைப் பிடித்த ரயில்வே போலீஸார் பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டதை அடுத்து விடுவித்தனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இந்நிலையில் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. அதில், மாணவர்கள் சிலர் பஸ்ஸின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு பயணிக்கின்றனர். பஸ்ஸுக்கு முன் இரு மாணவர்கள்  ஒரு பைக்கில் செல்கின்றனர். திடீரென பஸ்ஸுக்கு முன் சென்ற பைக் நிலை தடுமாறி நின்றுவிடவே, பஸ் டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் அடிக்கிறார். அதனால் பஸ் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் முன்னே சரிந்து விழுகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, இது ஒன்றே போதும் பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் இணையதள வாசிகள். அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories