December 6, 2025, 7:16 AM
23.8 C
Chennai

தூத்துக்குடியில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்ததால் பரபரப்பு….!

NATTU PADKU 3 - 2025
மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் 2-வதுநாளாக தொடர்கிறது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் மொத்தம் 245 விசைப்படகுகள் உள்ளன.

இவற்றில் பாதி அளவு படகுகளே மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகளும் மீன் பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புன்னக்காயலில் 300 படகுகள், ஆலந்தலையில் 150, அமலி நகரில் 170, வீரபாண்டியபட்டினத்தில் 115, பழைய காயலில் 45, கீழவைப்பார் பகுதியில் 160, சிங்கிதுறையில் 100 என சுமார் 1200 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டடனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவ நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனிடையே வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறியாத சில நாட்டுப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

எனினும் அத்தகைய மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அந்த ஏலக்கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories