February 22, 2026, 2:18 PM
30.4 C
Chennai

தூத்துக்குடியில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்ததால் பரபரப்பு….!

NATTU PADKU 3 - 2026
மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் 2-வதுநாளாக தொடர்கிறது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் மொத்தம் 245 விசைப்படகுகள் உள்ளன.

இவற்றில் பாதி அளவு படகுகளே மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகளும் மீன் பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புன்னக்காயலில் 300 படகுகள், ஆலந்தலையில் 150, அமலி நகரில் 170, வீரபாண்டியபட்டினத்தில் 115, பழைய காயலில் 45, கீழவைப்பார் பகுதியில் 160, சிங்கிதுறையில் 100 என சுமார் 1200 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டடனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவ நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனிடையே வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறியாத சில நாட்டுப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

எனினும் அத்தகைய மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அந்த ஏலக்கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories