தூத்துக்குடியில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்ததால் பரபரப்பு….!

NATTU PADKU 3 - 2026
மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் 2-வதுநாளாக தொடர்கிறது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் மொத்தம் 245 விசைப்படகுகள் உள்ளன.

இவற்றில் பாதி அளவு படகுகளே மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகளும் மீன் பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புன்னக்காயலில் 300 படகுகள், ஆலந்தலையில் 150, அமலி நகரில் 170, வீரபாண்டியபட்டினத்தில் 115, பழைய காயலில் 45, கீழவைப்பார் பகுதியில் 160, சிங்கிதுறையில் 100 என சுமார் 1200 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டடனா்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவ நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனிடையே வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறியாத சில நாட்டுப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

எனினும் அத்தகைய மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அந்த ஏலக்கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories