கோயில் பாரம்பரிய விழாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் நெல்லை போலீஸ்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

tenkasi amman temple - 2026

நெல்லை மாவட்டத்தில் காவல்துறை தேவை இன்றி தாங்களாகவே முன் வந்து கோயில் விழாக்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு தடை போட்டு வருகிறது இந்த அடக்குமுறை நீடித்தால் வருங்காலங்களில் கோயில் கொடை விழாக்களின் பாரம்பரிய நடைமுறை வழக்கத்தில் இல்லாமல் அறவே ஒழிந்து விடும் அபாயம் உள்ளது என்று இந்துக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்

இஸ்லாமியர்கள் தடைபோடும் முன்னதாகவே காவல்துறையினர் தாங்களாகவே  இஸ்லாமியர்களுக்கு இடைஞ்சலாக  இருக்கும் என்று கூறி ஹிந்துக்களின் கிராமிய பண்பாட்டு ஆலய விழாக்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

TSI ULGAMMAN - 2026அன்மையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் அம்மன் ஆலய கொடை விழா மற்றும் கிராமிய விழாக்களில் ஸ்பீக்கர் கட்டக்கூடாது என்றும் மேளம் அடிக்கக் கூடாது என்றும் சத்தம் போட்டு சாமி கும்பிட கூடாது என்றும் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து காவல்துறையினர் அடக்குமுறையில் ஈடுபட்டனர்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தங்கள் கோயில் கொடை விழாக்களை கொண்டாடி வந்த இந்துக்கள் இதுபோன்று சத்தம் ஏதும் இல்லாமல் மௌனமாக அமைதியாக சாமி படத்தையும் விக்கிரகத்தையும் வைத்து கும்பிடுவது சாமி கும்பிடுவது போல் இல்லை ஏதோ மயானத்தில் இருப்பது போல் தோன்றியது என்று மனம் வெதும்புகின்றனர்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இந்நிலையில் தென்காசி அருகிலுள்ள பாவூர்சத்திரம் ஆலங்குளம் கடையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இந்துக்கள் கூட்டமைப்பினர் ஒரு தகவலை வெளியிட்டனர்

அந்தத் தகவல் இதுதான்….

பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், சுரண்டை சுற்று வட்டார இந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்;

முன்னோர் காலத்தில் இருந்து நமது இந்து கோவில்களில் கொடைவிழாக்கள் ஆட்டம், பாட்டம், கச்சேரி என சிறப்பாக நடைபெற்று வந்தது..

சமீப காலமாக போலீஸ் கெடுபிடியால் குறிபிட்ட நேரம் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது..

வில்லிசை நிகழ்ச்சி கூட நடத்த முடியாமல் கொடைவிழாவை சரியாக நடத்த முடியவில்லை..

ஆதலால் நீண்ட காலமாக நாம் நடத்தகூடிய இந்து பாரம்பரிய திருவிழாக்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வருகிறது..

இதனை கண்டித்து வருகிற 23.6.19 (ஞாயிறு) அன்று மாலை 4மணிக்கு பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது..

ஆகையால், நமது சுற்று வட்டார இந்து கோவில் வரிதாரர்கள் அனைவரும் அனைத்து ஜாதி மக்களும் இந்து என்ற உணர்வோடு தவறாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்புபோல் எந்தவித கட்டுபாடுகளும் இல்லாமல் கொடைவிழா நடைபெற அனுமதி வழங்கிட வாரீர்! வாரீர்!

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

நமது சுற்றுவட்டார கோவில் நிர்வாகிகளுக்கு இதனை உடனே தெரியபடுத்தி 23.6.19 (ஞாயிறு) மாலை 4 மணிக்கு ஒவ்வோரு ஊர் வரிதாரர்கள் அனைவரையும் அந்தந்த கோவில் நிர்வாகிகள் தலைமையில் வேன், ஆட்டோ களில் அழைத்து வர வாட்ஸ்அப் நண்பர்கள் ஏற்பாடு செய்யுங்கள்..

ஆடி மாதம் கொடைவிழாவிற்கு இன்னும் 1மாதம் தான் உள்ளது.. அதனால் இந்த போராட்டம் வெற்றியடைய அனைத்து வரிதாரர்களும் தவறாமல் கலந்து கொள்ள வருமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்..

கோவில் கொடைவிழாவின் போது எப்படி அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்களோ அதைபோல் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..

இடம்; பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன்பு
நேரம்; மாலை 4 மணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories