காஞ்சி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் போது பக்தர்க்கு அனுமதி இல்லை!

varadhar vaibhavam - 2026

அத்திவரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காஞ்சி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்ப்பதற்கு அனுமதி இல்லை! குளத்து மண்டபத்திற்கு செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்! இந்த வைபவம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெறுகிறது!

varadhar vasanthamandapam2 - 2026அதற்கு முன்னதாக கோவில் குளத்தில் நான்கு கால் மண்டபத்தின் அடியில் இருக்கும் அத்திவரதர் வரும் 29ஆம் தேதி இரவு வெளியே எழுந்தருளச் செய்யப் படுகிறார். பெருமாளை வெளியில் எழுந்தருளச் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும்!

குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது!  ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது !

மேலும் சுவாமியை வெளியில் எழுந்தருள செய்த பின்பும் குளத்திலுள்ள மண்டபத்தை காணச் செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுரம் வெளி மற்றும் உள் புறம் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் ஏற்கனவே ஒவ்வொரு சன்னதி பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வைபவத்திற்காக பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வழிகளில் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வசந்த மண்டபம் எதிரில் மண் மேடாக இருந்த பகுதிகளில் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories