கீழப்பாவூர்: முன்னாள் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றியச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த கீழப்பாவூரை சேர்ந்த கு.காளிமுத்து சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவரது குடும்பத்திற்கு, கட்சி பிரமுகர்கள் மூலம் நிதி திரட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழப்பாவூர் யூனியன் துணைத்தலைவர் உத்திரகுணபாண்டியன், , கீழப்பாவூர் நகர செயலாளர் ஆர.பாஸ்கர், மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் மு.சேர்மப்பாண்டி, பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராதா, கூட்டுறவு சங்க தலைவர்கள் சுரேஷ்லிகோரி, வேல்சாமிபாண்டியன், யூனியன் கவுன்சிலர் ஆண்டபெருமாள், மேலவைபிரதிநிதி வி.கே.கணபதி, மாநில பேச்சாளர் அப்பாத்துரை, ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari