கட்டிய கணவனையே கொல்லும் ‘கள்ளக்காதல்’! நெஞ்சை உறையவைக்கும் கொலைப் ‘பதிவு’!

chennai murder - 2026

சென்னை கோயம்பேடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்று தற்கொலை என நாடகமாடிய மனைவி உட்பட இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். வயது 28. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர் இரு தினங்களுக்கு முன்னர், தனது வீட்டில் காது,மூக்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி காயத்திரி காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய கோயம்பேடு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் நாகராஜ், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து நாகராஜின் மனைவி காயத்திரியை காவல்துறையினர் உரிய விதத்தில், விசாரணை செய்தனர்.

இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.  காயத்திரிக்கும் நாகராஜின் நண்பர் மகேந்திரன் என்பவருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த நாகராஜ் காயத்திரியிடம் அதை கண்டித்ததுடன், தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், மகேந்திரனையும் தீர்த்துக்கட்டுவதாக அவர் கூறியதாகவும் தெரிகிறது.

இது குறித்த தகவல், மகேந்திரனின் மனைவி பானுவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் உஷாரான பானு, காயத்திரியுடன் இணைந்து முன்னதாகவே  நாகராஜை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதை அடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜை தலையணையால் முகத்தை அமுக்கி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இதனை மொபைல் போனிலும் பதிவு செய்ததாகக் கூறப் படுகிறது. காயத்ரி அவரது கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்யும் வீடியோ பதிவுகள், பார்ப்பவர் நெஞ்சை பதறச் செய்துள்ளது.

ஆனால், கணவன் இறந்தது குறித்து எதுவுமே தெரியாதது போல் காலை வானகரம் மீன் மார்கெட் சென்றுவிட்டு காயத்ரி நாடகமாடியுள்ளது தெரிவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் காயத்திரியையும், பானுவையும் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, டிவி சீரியல் தனமாக இந்தக் கொலையை செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தக் கொலை குறித்த வீடியோக்களும் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், கள்ளக் காதல் விவகாரம் குறித்த தீர்ப்பின் போது, கள்ளக்காதல் சட்ட விரோதமல்ல என்று தீர்ப்பு வெளியான பின்னர், கள்ளக் காதல் விவகாரத்தில் ஆண், பெண் இணைகள் கொலை செய்யப் படும் சம்பவங்கள் அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories