அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை திருச்சியில் துவக்கம்

athivarathar poststamp - 2026அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார்.

இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

1979ம் ஆண்டிற்கு பின், கடந்த ஜூலை 1ம் தேதி, அனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர் வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிட, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.அதன்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் உறையை,கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கவர்னர் மாளிகையில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் கூடுதல் முதன்மை செயலர் ராஜகோபால், முதன்மை அஞ்சல் துறை தலைவர்கள் சம்பத், சாருகேசி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட பலர்பங்கேற்றனர்.

athivarathar poststamp1 - 2026ஒரு லட்சம் அஞ்சல் சிறப்பு உறைகள் தயாரித்து, 20 ரூபாய்க்கு இந்திய அஞ்சல் துறை வழங்குகின்றது

திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை துவங்கியது.

அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேசிடம் சிறப்பு உறையினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , யோகா ஆசிரியர் விஜயகுமார், சதீஷ், கார்த்தி, தாமோதரன் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வாங்கினார்கள்.

  • செய்தி: யோகா விஜய், திருச்சி 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories