செங்கோட்டையில் பகீர்! கிணற்றுக்குள் குவியலாய்… பளபள பைக்குகள்! மர்மம் என்ன? மக்கள் கேள்வி!

bike sct - 2026நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பளபள வென கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது குறித்து செங்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில், ரயில்வே நிலையம் உள்ள பகுதியில், விஸ்வநாதபுரம் – பெரியபிள்ளை வலசை செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த நபர்களுக்குச் சொந்தமான அந்தத் தோட்டத்தில் பெரிய கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் தூர்வார கிணற்றில் இருந்து நீரை பம்பு செட் மூலம் வெளியேற்றினர். அப்போது கிணற்றில் 2 மோட்டார்பைக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், உடனடியாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் செங்கோட்டை போலீசார் அந்தப் பகுதிக்கு வந்தனர். போலீஸாரின் மேற்பார்வையில் கிணற்றில் மேலும் தேடிய போது, அதனுள் மேலும் சில இரு சக்கரவாகனங்கள் கிடந்துள்ளது தெரியவந்தது. போலீஸாரின் தேடுதலில் 10 பைக்குகள் வரை மீட்கப்பட்டன.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

bike sct1 - 2026இந்த இருசக்கர வாகனங்கள் சில புதிது போல் காணப்பட்டன. இவற்றை யார் எதற்காக கொண்டு வந்து கிணற்றுக்குள் போட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த வித பயன்பாடும் இல்லாமல், இவற்றை ஏன் கிணற்றுக்குள் கொண்டு வந்து எவருக்கும் பயன் அளிக்காத வகையில் போட வேண்டும் என்று போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக, இரு சக்கர வாகனங்கள் திருடு போனால் அவற்றை பகுதி பகுதியாகப் பிரித்து காயலான் கடையில் விற்றுவிடுவார்கள். பல்சர் பைக்குகள், யமஹா பைக்குகளை திருடி, இஞ்சின்களை தனியாகக் கழற்றிக்கொண்டு போய், ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கள்ளக் கடத்தலுக்கான படகுகளுக்கு பயன்படுத்துவர் என்று கூறப் படுகிறது. இந்நிலையில், எதற்கும் பயன் இன்றி, இவ்வாறு பைக்குகள் கிணற்றுக்குள் போடப் பட்டிருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories