அத்திவரதர் வைபவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

athivarathr1 horz - 2026

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியது.

காஞ்சி அத்தி வரதர் வைபவம் வரும் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடை பெற்று வரும் இந்த வைபவம் குறுகிய நாட்கள் என்பதால், லட்சக்கணக்கிலான பக்தர்கள் குறுகிய நாட்களுக்குள் வந்து தரிசித்து விட முண்டியடிப்பதாலும் தொடக்கம் முதலே ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று லட்சத்துக்கும் மேல் அன்பர்கள் வந்தனர்.

சயனக் கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் அருள்கிறார். இதனால் வரதரின் தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காக பக்தர்கள் முண்டியடித்து வருவதால், காஞ்சிபுரமே கதிகலங்கிப் போயுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் திக்கித் திணறி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

16 June03 high court - 2026இந்நிலையில், எப்போதுதான் இந்த வைபவம் நிறைவுறுமோ என்று பெருமூச்சு விடும் அளவுக்கு மாவட்ட ஆட்சியர் கருத்துகளைக் கூறி வருகிறார். இதனால் வரும் 16ஆம் தேதியோடு ஏற்கெனவே திட்டமிட்டபடி, அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்றும், அனந்தசரஸ் குளத்திற்கு அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்நிலையில், பக்தர்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் முறையீடு செய்தார்.
அத்திவரதர் வைபவம் முடிவடைய குறைவான நாட்களே உள்ள நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதாலும், இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதாலும், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என
முறையிட்டார்.

அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை ஒரு மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories