December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

அத்திவரதர் வைபவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

athivarathr1 horz - 2025

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியது.

காஞ்சி அத்தி வரதர் வைபவம் வரும் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடை பெற்று வரும் இந்த வைபவம் குறுகிய நாட்கள் என்பதால், லட்சக்கணக்கிலான பக்தர்கள் குறுகிய நாட்களுக்குள் வந்து தரிசித்து விட முண்டியடிப்பதாலும் தொடக்கம் முதலே ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று லட்சத்துக்கும் மேல் அன்பர்கள் வந்தனர்.

சயனக் கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் அருள்கிறார். இதனால் வரதரின் தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காக பக்தர்கள் முண்டியடித்து வருவதால், காஞ்சிபுரமே கதிகலங்கிப் போயுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் திக்கித் திணறி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

16 June03 high court - 2025இந்நிலையில், எப்போதுதான் இந்த வைபவம் நிறைவுறுமோ என்று பெருமூச்சு விடும் அளவுக்கு மாவட்ட ஆட்சியர் கருத்துகளைக் கூறி வருகிறார். இதனால் வரும் 16ஆம் தேதியோடு ஏற்கெனவே திட்டமிட்டபடி, அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்றும், அனந்தசரஸ் குளத்திற்கு அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்நிலையில், பக்தர்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் முறையீடு செய்தார்.
அத்திவரதர் வைபவம் முடிவடைய குறைவான நாட்களே உள்ள நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதாலும், இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதாலும், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என
முறையிட்டார்.

அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை ஒரு மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories