அத்திவரதர் வைபவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

athivarathr1 horz - 2026

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியது.

காஞ்சி அத்தி வரதர் வைபவம் வரும் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடை பெற்று வரும் இந்த வைபவம் குறுகிய நாட்கள் என்பதால், லட்சக்கணக்கிலான பக்தர்கள் குறுகிய நாட்களுக்குள் வந்து தரிசித்து விட முண்டியடிப்பதாலும் தொடக்கம் முதலே ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று லட்சத்துக்கும் மேல் அன்பர்கள் வந்தனர்.

சயனக் கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் அருள்கிறார். இதனால் வரதரின் தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காக பக்தர்கள் முண்டியடித்து வருவதால், காஞ்சிபுரமே கதிகலங்கிப் போயுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் திக்கித் திணறி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

16 June03 high court - 2026இந்நிலையில், எப்போதுதான் இந்த வைபவம் நிறைவுறுமோ என்று பெருமூச்சு விடும் அளவுக்கு மாவட்ட ஆட்சியர் கருத்துகளைக் கூறி வருகிறார். இதனால் வரும் 16ஆம் தேதியோடு ஏற்கெனவே திட்டமிட்டபடி, அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்றும், அனந்தசரஸ் குளத்திற்கு அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்நிலையில், பக்தர்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் முறையீடு செய்தார்.
அத்திவரதர் வைபவம் முடிவடைய குறைவான நாட்களே உள்ள நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதாலும், இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதாலும், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என
முறையிட்டார்.

அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை ஒரு மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories