spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னைநீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் மீண்டும் முறையீடு:

நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் மீண்டும் முறையீடு:

- Advertisement -

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வம் வழக்குரைஞர் மீண்டும் மனு கொடுத்துள்ளார்.

வியாழக்கிழமை விசாரணையின்போதும், தனது நடவடிக்கையை கீழ்த்தரமான நடவடிக்கை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விமரிசித்துள்ளதாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையிட்டதைத் தொடர்ந்து அதனைப் படித்துப் பார்ப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு புதன்கிழமை தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், பொதுக்குழு வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையிட்டிருக்கலாம் என்றும், இது நீதித்துறையை களப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்  என்றும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக ஓபிஎஸ் தரப்பு வாதம் முன் வைத்தது. இதையடுத்து, இந்த மனு நிராகரிக்கப்படுவதாகவும், நாளை வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில், இதேக் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒபிஎஸ் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சட்டப்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக் குழு நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தோ்தெடுக்கப்பட்டாா். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை முதல் விசாரிக்கவிருந்தார்.

இதனிடையே, இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினா்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவா்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையை பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரா்களை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீா்செல்வம் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கட்சியின் பொதுக் குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்குக்கு தொடா்பில்லாத கருத்துகளாகும். எனவே, அதிமுக பொதுக் குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் இதே கோரிக்கை தலைமை நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe