December 6, 2025, 4:51 AM
24.9 C
Chennai

சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் ..

1752171 vinayagar1 - 2025

விநாயகர் சதுர்த்தி விழா 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆக 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்று ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறிய வகையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி சென்னை கொசப்பேட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு விதமான கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

2 அடி உயரம் வரை இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.100 முதல், ரூ.1000 வரை விலையில் சிலைகள் களிமண்ணால் தயாராகி வருகின்றன. பல்வேறு விதமான வடிவில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு மெருகேற்றப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும் கொசப்பேட்டையில் ஐந்து அடி முதல் 12 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன. கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன் தெரு, ஏமிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பெரிய வகையிலான விநாயகர் சிலைகள் தற்போது சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. கம்பீரமாக பலவித வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கிறார்கள். மேலும் 31-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்காக இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பிரமாண்ட விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வெயில், மழை பாதிப்பில் இருந்து தடுக்க அனைத்து விநாயகர் சிலைகளும் பாலித்தின் கவரில் மூடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories