சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் ..

1752171 vinayagar1 - 2026

விநாயகர் சதுர்த்தி விழா 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆக 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்று ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறிய வகையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி சென்னை கொசப்பேட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு விதமான கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

2 அடி உயரம் வரை இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.100 முதல், ரூ.1000 வரை விலையில் சிலைகள் களிமண்ணால் தயாராகி வருகின்றன. பல்வேறு விதமான வடிவில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு மெருகேற்றப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும் கொசப்பேட்டையில் ஐந்து அடி முதல் 12 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன. கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன் தெரு, ஏமிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பெரிய வகையிலான விநாயகர் சிலைகள் தற்போது சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. கம்பீரமாக பலவித வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கிறார்கள். மேலும் 31-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்காக இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பிரமாண்ட விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வெயில், மழை பாதிப்பில் இருந்து தடுக்க அனைத்து விநாயகர் சிலைகளும் பாலித்தின் கவரில் மூடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories